Friday, June 24, 2011

விஜய்யை அடுத்து இயக்குவது யார்?

விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வேலாயுதம்'.  இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

அனைத்து படப்பிடிப்புகளும் நடந்து முடிந்தவுடன் ஜுலை 2வது வாரத்தில் இசை வெளீயிட்டு விழா நடைபெற இருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்த வெளீயிடாக ஷங்கரின் இயக்கத்தில் 'நண்பன்' வெளிவர இருக்கிறது. அடுத்து யார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது தான் இப்போதைய தமிழ் திரையுலகினரின் பேச்சு!.

சீமான் இயக்கத்தில் 'பகலவன்' படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். சீமான் அடுத்து நான் விஜய் படத்தை தான் இயக்க இருக்கிறேன் என்று கூறி வந்தாலும் விஜய் இன்னும் எனது அடுத்த படம் இது தான் என்று கூறவில்லை. அதுமட்டுமல்லாது ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யா நடிப்பில் 'ஏழாம் அறிவு' படத்தை முடித்துவிட்டு விஜய் வைத்து படம் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விஜய். அச்சந்திப்பில் விஜய் பேசியது " எனது திரையுலக வாழ்க்கையில் 'காவலன்' படம் முக்கியமானது. அப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தேன்.  அனைத்து பிரச்னைகளை முடிந்து படம் வெளியாகி வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமல்லாது ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட்டோம்.

அடுத்து 'நண்பன்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் ஷங்கர் இந்தியாவின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். அவருடைய இயக்கத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. 'நண்பன்' படம் கண்டிப்பாக எனது திரையுலக வாழ்வில் பெரிய படமாக அமையும்." என்று கூறினார்.

அதனையெடுத்து அடுத்த படம் சீமான் இயக்கத்திலா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலா என்று கேட்டனர். அதற்கு விஜய் பார்க்கலாம் என்று கூறினார்.

இயக்குனர் சீமான் விஜய்யின் கால்ஷுட்டிற்காக காத்து கொண்டிருக்க, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு பல தயாரிப்பாளர்கள் இப்போதே நாங்கள் தயாரிக்க முன் வருகிறோம் என்று போன் போட்டு கொண்டிருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...