Tuesday, June 21, 2011

பிறந்தநாள் கொண்டாட்டம்! ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!!

தனது பிறந்தநாளை முன்னிட்டு கண் தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய்க்கு நாளை (22-06-11) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...