Tuesday, March 8, 2011

அ.தி.மு.க., கூட்டணியில் விஜய்க்கு 3சீட்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இந்நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மூன்று சீட்டு கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகராக உள்ள விஜய், விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார். இதற்கு அச்சாரமாக கடந்த 2009ம் ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த விழாவில் விஜய்யின் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை உருவாக்கி, கட்சியின் கொடியையும் வெளியிட்டார். அப்போது அந்த விழாவில் பேசிய விஜய், இது என்னுடைய அரசியலுக்கான அச்சாரம் என்றும், இப்போதைக்கு அரசியலில் களம் இறங்கும் எண்ணம் இல்லை என்றும். ஆனால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் காவலன் படத்தை  ரிலீஸ் செய்ய பலதரப்பில் இருந்து, பல்வேறு பிரச்சனைகள் வந்தது. இப்பிரச்சனையை சமாளிக்க அ.தி.மு.க.,வின் உதவியை நாடினர் விஜய்யும், அவரது தந்தையும். ஒரு வழியாக அந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்து காவலன் படமும் ரிலீசானது.

காவலன் பட பிரச்சனைக்கு பிறகு அரசியலில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார் விஜய். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, இலங்கை அரசுக்கு எதிராக நாகையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து‌ கொண்டு பேசினார். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆரவாக ‌விஜய் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்தநிலையில், அவருடைய மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்களையும் நிறுத்தபோகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விஜய் நேரடியாக தேர்தலில் களம் இறங்கவில்லை. அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போகிறார். இதுதொடர்பாக அ.தி.மு.க., கூட்டணியில், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் 3சீட் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை உறுதியாக வரவில்லை. தேர்தலில் விஜய் நிற்கவில்லையாம், அதற்கு பதிலாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும், அவரது கட்சி நிர்வாகிகள் இரண்டு பேரை நிறுத்த போகிறாராம்.

1 comment:

  1. thalaiva sandanathala kulikra unna saakadaila thalla pakkranga villundradhey.......

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...